0 0
Read Time:1 Minute, 5 Second

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே துளசேந்திரபுரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமை தாங்கினார்.

பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் அபிநயா ஆறுமுகம், கால்நடை டாக்டர் கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

விழாவை முன்னிட்டு பேச்சு, கட்டுரை, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவில், ஊராட்சி மன்ற தலைவர்கள் கனகராஜ், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். முடிவில் ஊராட்சி உறுப்பினர் சுஜிதா முத்துவேல் நன்றி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %