0 0
Read Time:1 Minute, 57 Second

சிதம்பரம் வட்டம், அண்ணாமலைநகர் திருவேட்களத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 120 ஆண்டுகளாக நடந்து வந்த திருவிழா கொரோனா பெருந்தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை.

இந்தாண்டு 121-வது திருவிழா கடந்த 2-ந்தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் மகாபாரதம் படிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு அரவான் ஊர்வலம் நடந்தது.

நேற்று மாலை முக்கிய உற்சவமான தேரோட்டம் விமரிசையாக நடந்தது. மாலை 5 மணியளவில் கோவிலில் இருந்து அரவான் தேரில் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக பாசுபதேஸ்வரர் கோவிலை வந்தடைந்தார்.

தொடர்ந்து அரவான் களப்பலி, காளியாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான திருநங்கைகள், பக்தர்கள் கலந்து கொண்டு பிரமாண்டமான மாலைகளை அரவானுக்கு அணிவித்து தரிசனம் செய்தனர்.

இதில் அண்ணாமலை நகர், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கூத்தாண்டவர் கோவில் பரம்பரை அறங்காவலர் குடும்பத்தினர் மற்றும் திருவேட்களம் கிராம மக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணிகளில் அண்ணாமலை நகர் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %