0 0
Read Time:59 Second

மயிலாடுதுறை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி கிருஷ்ணன் நேற்று தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோவில் அருகே கிடாரம்கொண்டான் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் அரிசியின் தரம், அதனுடைய எடை அளவு ஆகியவற்றை சரிபார்த்தார். பின்னர் அவர், தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் தரமான அரிசி அனுப்பி வைக்க வேண்டும் என்று உதவி தரக்கட்டுப்பாட்டு அலுவலர் ராகவனிடம் அறிவுறுத்தினார். ஆய்வின்போது தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு உள்பட பலர் உடன் இருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %