0 0
Read Time:1 Minute, 17 Second

சேத்தியாத்தோப்பு
கீரப்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட சக்காங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் தேவராஜ். இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவைத்திருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருட முயன்றதை பார்த்து அக்கம்பக்கத்தினர் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் இதுபற்றிய தகவல் அறிந்து வந்த ஒரத்தூர் போலீசாரிடம் 2 மர்ம நபர்களையும் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி கோ.பாடி கிராமத்தைச் சேர்ந்த அன்பு மகன் சேட்டு(வயது 22), சிதம்பரம் கொத்தங்குடி தெரு சந்திரன் மகன் மணிகண்டன்(22) என்பதும், இருவரும் மோட்டார் சைக்கிளை திருட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைதுசெய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %