மயிலாடுதுறை, மே- 16;
மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சி, பால் பண்ணை அருகில் ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று தரைதளத்தின் கட்டடத்தின் அளவையும், தரத்தையும், ஆய்வு செய்தார். அரசு விதிகளின்படி கட்டடம் கட்டப்பட்டு வருகிறதா எனவும் சரியான அளவு, கனத்தின் உயரம், கம்பிகளின் தரம் போன்றவற்றை ஆய்வு செய்தார்.
மேலும், வரைபடத்தின் மூலம் ஒவ்வொரு தளத்திலும் அமையவுள்ள அலுவலகங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அங்கு கட்டுமானப் பணி நடைபெற்று வரும் இடத்திலுள்ள தரக்கட்டுபாடு ஆய்வகத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைத்து பணிகளையும் விரைவாகவும் தரமாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உத்திரவிட்டார்.
இவ்ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் டி.நாகவேலு, அபிராமி கன்ஸ்டரக்சன்ஸ் ஒப்பந்தாரர் ஆகியோர் உடனிருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.