0 0
Read Time:2 Minute, 20 Second

சென்னை, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியாவுக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது.

இங்கு நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தபோது, 2-வது மாடியில் உள்ள உணவு கூடத்துக்கு ‘லிப்ட்’ மூலம் கேட்டரிங் பணியாளர்கள் உணவு பொருட்களை எடுத்து சென்றனர். அப்போது ‘லிப்ட்’டின் இரும்பு கம்பி திடீரென அறுந்து விபத்துக்குள்ளானது.

இதில் கேட்டரிங் பணியாளரான காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவன் சீத்தலின் (வயது 19) என்பவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் சக கேட்டரிங் பணியாளர்களான திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஜெயராமன் (23), விக்னேஷ் (21) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்து, சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் திருமண மண்டப உரிமையாளரும், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகளுமான ஜெயப்பிரியா உள்பட மொத்தம் 4 பேர் மீது ஜாமீனில் வெளி வரமுடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், மண்டப மேலாளரான திருநாவுக்கரசு (32), மேற்பார்வையாளர் வெங்கடேசன் (40) மற்றும் ‘லிப்ட்’ ஆபரேட்டரான புளியந்தோப்பை சேர்ந்த கக்கன் (22) ஆகிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %