0 0
Read Time:2 Minute, 15 Second

மயிலாடுதுறை, மே- 16;
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா. லலிதாஇ தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொது மக்கள் வருகைபுரிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனர்.

இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 32 மனுக்களும், முதியோர், 25 மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகை கோரி 15 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 25 கல்வி உதவித்தொகை வங்கிக் கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரிய மனுக்கள் 10 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை வங்கிகடன் வங்கிகடன் கோரி 38 மனுக்கள், மொத்தம் 145 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

பின்னர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 05 மாற்றுதிறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் ஸ்ரீ.கிருஷ்ணன் மற்றும் அனைத்துதுறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %