0 0
Read Time:1 Minute, 15 Second

கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட மருதூர், ஜெயங்கொண்டம் நத்தமேடு, குமுடிமூலை கொத்தவாச்சாரி, கல்லையன் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் தரிசு நிலம், மற்றும் சாலைகளின் ஓரமாக சீராளன் நினைவு கல்வி அதிகார அறக்கட்டளை துவங்கியுள்ள ‘தமிழகம் செழிக்கட்டும்’ திட்டத்தின் முதல் கட்டமாக இவ்வறக்கட்டளை நடத்திவரும் – ஜெய்பீம் இரவு பாடசாலை மாணவர்களை கொண்டு; இந்த பகுதிகளில் இன்று வேம்பு, அரசன், புங்கன், புளியம் உள்ளிட்ட விதைகள், சுமார் 2000 விதைப்பந்துகளாக, மாணவர்களான தினேஷ், ரகுவரன், தியாகராஜன், சுரேந்திரன், பாலமுரளி, ரமேஷ், தியாகு, நித்திஷ், தனஞ்செழியன், இளவரசன், சிற்றரசு, ஆகியோரின் துணைகொண்டு விதைக்கப்பட்டது.

அறக்கட்டளையின் நிறுவனர் பேராசிரியர் முனைவர் ஜோதிமணி சீராளன் மாணவர்களோடு கலந்துகொண்டு அறப்பணியை மேற்கொண்டார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %