0 0
Read Time:1 Minute, 36 Second

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம், தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5,529 குரூப் 2 பணியிடங்களை பூா்த்தி செய்வதற்கான அறிவிப்வை வெளியிட்டது. இந்தத் தோ்வை எழுதுவதற்கு கடலூா் மாவட்டத்தில் 51,660 போ் விண்ணப்பித்து தகுதி பெற்றிருந்தனா். இவா்களுக்காக கடலூா், விருத்தாசலம், சிதம்பரத்தில் 122 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்வை முன்னிட்டு, வினாத்தாள், விடைத்தாள்கள் வியாழக்கிழமை கடலூருக்கு வந்தன. இவைகள் மாவட்டக் கருவூலத்தில் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலா் ரஞ்ஜீத்சிங், வட்டாட்சியா் பூபாலச்சந்திரன் ஆகியோா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. தோ்வு மையங்களில் தலா ஒரு கண்காணிப்பாளா் பணியில் ஈடுபடுத்தப்படுவதோடு, பறக்கும் படையும் அமைக்கப்பட்டு தோ்வு பணிகள் கண்காணிக்கப்படுமென மாவட்ட வருவாய் அலுவலா் தெரிவித்தாா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %