0 0
Read Time:2 Minute, 7 Second

புவனகிரி அருகே உள்ள வடஹரி ராஜபுரத்தில் அதிமுக கீரப்பாளையம் கிழக்கு ஒன்றிய கிளை நிர்வாகிகள் செயலாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவைத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார் எம்ஜிஆர் மன்ற செயலாளர் முருகமணி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன் நல்லூர் ஒன்றிய செயலாளர் முத்து முன்னிலை வகித்தனர் கீரப்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி வரவேற்றார் சிறப்பு அழைப்பாளராக அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் பங்கேற்று பேசினார் கூட்டத்தில் கீரப்பாளையம் கிழக்கு ஒன்றிய கிராமங்களில் உள்ள கிளை நிர்வாகிகள் புதிதாக உள்ள கிளை செயலாளர்கள் அனைவரும் அயராது கட்சிப் பணியாற்ற வேண்டும் என்றும் அதிகப்படியான இளைஞர்களை கட்சியில் சேர்த்து வரும் காலங்களில் அதிமுக வெற்றி பெற வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் அண்ணாதுரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கருணாகரன் பன்னீர்செல்வம் ஊராட்சி தலைவர் அன்பழகன் கிருஷ்ணராஜ் மாவட்ட பிரதிநிதி தில்லைகோவிந்தன் தகவல் தொழில்நுட்ப மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தகவல் தொழில்நுட்ப ஒன்றிய செயலாளர் பிரவீன் ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.

மாவட்ட செய்தியாளர்:பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %