0 0
Read Time:1 Minute, 38 Second

சிதம்பரம், கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பெரியகுப்பம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இங்கு கடலூரைச் சேர்ந்த கண்ணன் (வயது 58) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று சக ஊழியர்களுடன் ஆலைக்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் அங்குள்ள இரும்பு பொருட்களை திருடிக் கொண்டிருந்தனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த கண்ணன் சக ஊழியர்களுடன் திருட்டு கும்பலை பிடிக்க முயன்றார். ஊழியர்கள் வருவதை பார்த்த மர்மகும்பல் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களையும், திருடிய பொருட்களையும் அங்கேயே போட்டு விட்டு, தப்பியோடிவிட்டனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆலைக்குள் மர்மகும்பல் போட்டுச் சென்ற 10 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் தப்பியோடிய மர்மகும்பலையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %