0 0
Read Time:1 Minute, 28 Second

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்திற்கு உட்பட்ட 90 நியாயவிலை கடைகளுக்கு கிடாரம்கொண்டான், பொன்செய் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. ஜூன் மாதத்திற்கான முன் நகர்வு பணிகள் கடந்த மே 21 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு நியாயவிலை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்தும், சரியான எடையில் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்து, தரமான அரிசிகள் அனுப்பி வைக்கப்படுவதை உறுதி செய்தார். ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கின் தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராகவன், எழுத்தர் மணிகண்டன், நகர்வு எழுத்தர்கள் பிரதீப் மற்றும் வித்யாசாகர் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர்: சதீஷ்மாதவன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %