0 0
Read Time:1 Minute, 47 Second

தரங்கம்பாடி, மே.28:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் தூய்மை பணி விழிப்புணர்வு பேரணி பேரூராட்சி செயல் அலுவலர் பூபதி.கமலக்கண்ணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த பேரணியில் பேரூராட்சி மன்றத் தலைவர் சுகுண சங்கரி குமரவேல் கலந்து கொண்டு பொறையார் புதிய பேருந்து நிலையத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணி பொறையார் கடைவீதி பழைய பேருந்து நிலையம் வீரப்பன் பிள்ளை தெரு தோட்டம் கீழ வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக தூய்மை பணிகள் குறித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு தூய்மைப் பாதுகாவலர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேரணியாக பேரூராட்சி அலுவலகம் வந்தடைந்தனர்.

இதில் துணைத் தலைவர் பொன்.ராஜேந்திரன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் இளங்கோவன், பேரூர் திமுக துணை செயலாளர் தா மதியழகன், மாவட்ட திமுக பிரதிநிதி சடகோபன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் பாரி சரவணன் மற்றும் 18 வார்டுகளின் உறுப்பினர்கள் வார்டு கவுன்சிலர்கள், பேரூர் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %