0 0
Read Time:2 Minute, 27 Second

சிதம்பரம் நடராஜர் கோவில் பெண் துப்புரவு பணியாளர் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.25ஆயிரத்தை அபேஸ் செய்த புரோகிதர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்

கடலூர்,

சிதம்பரம் கோவிந்தசாமிதெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருடைய மனைவி விஜயா (வயது 50). இவர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள அன்னதான கூடத்தில் அன்னதானம் வாங்கி கோவில் மூலஸ்தானம் அருகில் உட்கார்ந்து சாப்பிட்டதாக தெரிகிறது.

பிறகு தான் கையில் வைத்திருந்த சுருக்கு பையை வைத்து விட்டு, கை கழுவ சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, அவர் வைத்திருந்த சுருக்கு பையை காணவில்லை. அதில் தனியார் வங்கி ஏ.டி.எம். கார்டை, அதன் ரகசிய குறியீட்டு எண்ணுடன் வைத்திருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவிலில் பல்வேறு இடங்களிலும் தேடினார். ஆனால் பை, ஏ.டி.எம். கார்டு கிடைக்கவில்லை.

வழக்கு

மறுநாள் தன்னுடைய தாய் ரூ.25 ஆயிரம் வங்கியில் போட்டுள்ளதாக கூறியதால், அந்த பணத்தை எடுக்க வங்கிக்கு விஜயா சென்றார். ஆனால் அதற்குள், அந்த பணத்தை யாரோ எடுத்து விட்டது தெரிய வந்தது. இதுபற்றி அவர் சிதம்பரம் நகர போலீசில், கோவிலில் தனக்கு அருகில் இருந்த புதுத்தெருவை சேர்ந்த புரோகிதர் அமிர்தகடேஸ்வரன் (48) என்பவர் தான் தன்னுடைய ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்திருக்கலாம் என்று புகார் செய்தார். அதன்பேரில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %