0 0
Read Time:2 Minute, 32 Second

மயிலாடுதுறை: பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களே உடனடி தீர்வு காண மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா,இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்ற பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 143 மனுக்கள் பெறப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதாஇ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனுக்களை அளித்தனர்.

இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 20 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 13 மனுக்களும், முதியோர். மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகை கோரி 15 மனுக்களும், புகார் தொடர்பாக மனுக்கள் 5, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 80 மனுக்கள், அடிப்படை வசதிகள் கோரி 10 மனுக்கள் ஆக மொத்தம் 143 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) என்.ஷாஜஹான், மாவட்ட வழங்கல் அலுவலர் ஸ்ரீ.கிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

செய்தியாளர்:ஜமால், மயிலை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %