0 0
Read Time:2 Minute, 12 Second

பாரதிய ஜனதா கட்சியின் சிதம்பரம் நகர் மண்டல் சார்பாக உலக யோகா தினம் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ்சிவா ம‌ற்று‌ம் கடலூ‌ர் மே‌ற்கு மாவட்ட தலைவர் மாமல்லன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். சிதம்பரம் நகர் மண்டல் தலைவர் இன்ஜினீயர் ஜெயக்குமார் தலைமையில் மாவட்ட பொது செயலாளர் கோபிநாத்கணேசன் முன்னிலையில் மாவட்ட குடும்ப ப்ரபோகன் ராமசபேசன் யோகா பயிற்சிகள், மூச்சு பயிற்சிகள், உடல், மனம் புத்துணர்ச்சி பெறுவதற்கு பயிற்றுவித்தார்கள்.

இதில் சிதம்பரம் நகர் மண்டலில் உள்ள மாநில, மாவட்ட, மண்டல் மற்றும் அணி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டு யோகாசன பயிற்சியை மேற்கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொருளாளர் மருதை, மருத்துவ அணி மாவட்ட தலைவர் ஆனந்த் இராணுவ பிரிவு மாநில துணை தலைவர் கேப்டன் பாலசுப்ரமணியம், மாவட்ட மகளிரணி தலைவி சுஜாதாசெந்தில், அலுவலக செயலாளர் அரவிந்த், குமராட்சி கிழக்கு மண்டல் தலைவர் சுபாஷ் சந்திரன் குமராட்சி மேற்கு மண்டல் தலைவர் பரத் குமராட்சி மேற்கு மண்டல் பொருளாளர் முருகவேல், மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் நாகேஸ்வர ராவ், பட்டியல் அணி மாநில செயலாளர் சரவணக்குமார், மாவட்ட பட்டியல் அணி தலைவர் கிருஷ்ண மூர்த்தி, மற்றும் நகர நிர்வாகிகள் பாலாஜி தீட்சிதர், குருமூர்த்தி, மணிவண்ணன், கமலக்கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்:பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %