0 0
Read Time:1 Minute, 20 Second

சிதம்பரம் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் காந்தி சிலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சிதம்பரம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் மகன் சேதுராமன் (வயது 34) என்பதும், சிதம்பரம் பஸ் நிலை யத்தில் நின்று கொண்டிருந்த ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த செங்குட்டுவன் மனைவி சங்கீதா (33)வைத்திருந்த 2 பவுன் நகையை பையுடன் திருடி வந்ததும் தெரியவந்தது. மேலும் இவர் சிதம்பரம் பகுதியில் உள்ள வீடுகளின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சேதுராமனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 2 பவுன் சங்கிலி, 3 வெள்ளி விளக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %