0 0
Read Time:2 Minute, 59 Second

மயிலாடுதுறை கொள்ளிடம்: கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கிராம மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரி, வெண்ணாறு, வெட்டாறு, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகள் செல்கின்றன. இந்த ஆறுகள் மூலமாக விவசாய பாசனத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் கிடைக்கிறது. கர்நாடகத்தில் கனமழை கொட்டித்தீர்த்து அங்கு உள்ள அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டால் மட்டுமே டெல்டா பகுதி ஆறுகளில் தண்ணீர் வரத்து இருக்கும்.கொள்ளிடம் ஆறு டெல்டா மாவட்டங்களின் முக்கிய வடிகால் ஆறாகும். காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது கொள்ளிடத்தில் அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் முழுவதும் கடலுக்கு நேரடியாக செல்கிறது.

தற்போது கர்நாடக மாநிலத்தில் கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பியது. கர்நாடகத்தில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வரத்து இருப்பதால் கொள்ளிடத்தில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது.கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளிடத்தில் 2½ லட்சம் கன அடி தண்ணீர் சென்றது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கொள்ளிடம் ஆற்றுக்குள் உள்ள படுகை கிராமங்கள் தண்ணீரால் சூழப்பட்டன. அந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி அரசின் நிவாரண முகாம்களில் தங்கி இருந்தனர்.

கடந்த 2 நாட்களாக தண்ணீர் வரத்து குறைந்து, கிராமங்களில் இருந்து தண்ணீர் வெளியேறி வந்த நிலையில் மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வந்தனர். இந்த நிலையில் நேற்று கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.இதனால் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து ஆற்றுப்படுகை கிராம மக்கள் மீண்டும் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %