0 0
Read Time:2 Minute, 30 Second

தரங்கம்பாடி, ஆகஸ்ட் -14;
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, சங்கரன்பந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் ஏராளமான இளைஞர்கள், பெண்கள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர். இதில் திமுக மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.அப்துல் மாலிக், குத்தாலம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் மங்கை சங்கர், மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பி எம் ஸ்ரீதர், தரங்கை பேரூராட்சி திமுக செயலாளர் முத்துராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எம்.சித்திக், மாவட்ட திமுக பிரதிநிதி கே.எஸ்.கருணாநிதி, உத்திரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் லெனின் மேசாக், விசிக சிறுபான்மை அணி மாநில செயலாளர் முஜுபுர் ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

முகாமிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சங்கரம்பந்தல் கிளை நிர்வாகிகள் அப்துல் ரகுமான், முகமது யாசர் அரஃபாத், அப்துல் பாசித், தமிழ்முன் அன்சாரி ஆகியோர் செய்திருந்தனர். மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை மருத்துவர்கள் பிரகாஷ், பிரவீன் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் இரத்த தானத்தை பெற்றுக்கொண்டு, இரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %