3 1
Read Time:2 Minute, 12 Second

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீன திருமட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் வைத்தீஸ்வரன் கோயில் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் ஸ்ரீ முத்தையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்றத் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

பள்ளியின் புரவலர் தருமை ஆதீனம் 27-வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி மன்ற செயல்முறைகளை துவக்கி வைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஆசி வழங்கினார்கள். மேலும் இலக்கிய மன்ற மாணவ தலைவர், விளையாட்டு அணி மாணவ தலைவர்கள் மற்றும் மன்ற தலைவர்கள் அனைவரும் குரு மகா சந்நிதானம் முன்னிலையில் பதவி ஏற்று கொண்டனர்.

அது சமயம் பள்ளியின் நிர்வாக குழு தலைவர் வரவேற்புரையும், பள்ளியின் முதல்வர் நன்றி உரையும் வழங்கினார்கள். மேலும் மாணவர்கள் உரை மற்றும் கலைநிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கும் ஸ்ரீலஸ்ரீ குரு மகா சந்நிதானம் பரிசுகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கட்டளை தம்பிரான் சுவாமிகள் மற்றும் வைத்தீஸ்வரன் திருக்கோயில் அலுவலர்கள், திருமடத்தின் அலுவலர்கள், பள்ளியின் நிர்வாகக்குழு தலைவர், செயலர், பொருளர், முதல்வர், ஆசிரியர்கள், அலுவலகத்தோர், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மிஷன் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர், கண்காணிப்பாளர், மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %