0 0
Read Time:4 Minute, 34 Second

பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியா பேரழிவை நோக்கி செல்வதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை யாத்திரையை தொடங்கியுள்ளார். கடற்கரையில் இருந்து யாத்திரை தொடங்கிய நிலையில், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

பின்னர் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, அருமையான இயற்கை சூழலில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் இருந்து பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு பிறகு நாட்டு மக்களுக்கு ஏன் சுதந்திரம் தேவைப்படுகிறது என கேள்வி எழுப்பிய அவர், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தேசத்தை ஒற்றுமைபடுத்து வேண்டும் என்பதை உணர்த்த இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூறினார்.

தேசிய கொடியை பார்க்கும் போது வாழ்த்த வேண்டும் என்று மனதார விரும்புகிறோம். சிலர் மூவர்ண கொடியை பார்த்து சாதாரண கொடி என்று நினைக்கலாம் அதைவிட மிகவும் மேலானது.. இந்த கொடி நம் கைகளுக்கு சாதரணமாக வந்து விடவில்லை, இது பரிசாக கிடைக்கவில்லை, இந்திய மக்களால் மீட்டெடுக்கப்பட்ட கொடி என கூறினார்.

இந்த கொடி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த கொடி ஒரு மதத்திற்கோ, மாநிலத்துக்கோ, ஜாதிக்கோ சொந்தமானது அல்ல. நாட்டினுடைய, மாநிலத்தினுடைய அடையாளம் அல்ல. இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனின் உரிமையை உறுதிபடுத்துகிறது என பெருமை தெரிவித்தார்.

இந்தியாவில் இருக்கின்ற ஒவ்வொரு நிறுவனமும் பாஜக என்ற இயக்கத்தினால் அச்சுறுத்தப்பட்டு வருகிறது என குற்றம்சாட்டிய அவர், நாட்டில் இருக்கும் எதிர்கட்சிகளை புலனாய்வு துறை, வருமான வரித்துறை மூலம் அச்சுறுத்தி வருகின்றனர் என்றார்.

இது போன்ற செயல்களினால் எங்களை அச்சுறுத்தவோ, முடக்கவோ முடியாது என ராகுல்காந்தி தெரிவித்தார். மதத்தின் மூலம், மொழியின் மூலம் பிரித்து விடலாம் என பாஜக நினைக்கிறது. ஆனால் அது முடியாது. இந்தியா பிரதமர் மோடி ஆட்சியில் பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள முக்கிய துறைமுகங்கள், விமான நிலையங்கள் சில தொழிலதிபர்கள் கையில் தான் உள்ளது.

ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எந்த அனுகுமுறை இருந்ததோ அதை தான் தற்போது பாஜக அரசு செய்து வருகிறது. இன்று சிறுகுறு நடுத்தர தொழில்கள் முடக்கப்பட்டு செயலிழந்து உள்ளது. இந்த சூழ்நிலையில் புதிய வேலைவாய்ப்பு களை உருவாக்க முடியாத சூழல் உள்ளது. வரலாற்றில் இல்லாத மிக மோசமான காலகட்டத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். எனவே இந்தியாவில் உள்ள அனைத்து மக்களையும் நாம் ஒன்றினைக்க வேண்டும் அதற்காக தான் இந்த ஒற்றுமை நடபயணத்தை தொடங்கி உள்ளோம் என ராகுல்காந்தி தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %