0 0
Read Time:1 Minute, 40 Second

பூம்புகார் எம் எல் ஏ நிவேதா எம்.முருகன் பிறந்தநாளையொட்டி மனவளர்ச்சி குன்றியோர் காப்பகப்பள்ளி குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டது

மயிலாடுதுறை செப்-12, மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் கிருபாலயம் என்ற பெயரில் இயங்கிவரும் மனவளர்ச்சி குன்றியோர் காப்பகப்பள்ளியில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா.எம்.முருகனின் பிறந்தநாளையொட்டி தரங்கம்பாடி பேரூராட்சியின் 6 ஆவது வார்டு கவுன்சிலர் செந்தாமரைச்செல்வி ரமேஷ் மதிய உணவினை ( பிரியாணி) வழங்கினார்.

தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி குமரவேல் குழந்தைகளுக்கு உணவு பரிமாறி சட்டமன்ற உறுப்பினரின் பிறந்தநாளைக்கொண்டாடினர். பேரூராட்சிதுணைத்தலைவர் பொன்.இராஜேந்திரன், திமுக பிரமுகர்களான சாத்ராக், அர்ஜூனன், குமார், சடகோபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

படவிளக்கம்;- தரங்கம்பாடி கிருபாலயம் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கிய பேரூராட்சி பெருந்தலைவர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %