0 0
Read Time:1 Minute, 9 Second

தரங்கம்பாடி, செப்.17: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் கீழமுக்கூட்டில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

செம்பனார்கோவிலில் திமுக சார்பில் தந்தை பெரியார் 144 வது பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.அன்பழகன், எம்.அப்துல்மாலிக் , மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பி.எம். ஸ்ரீதர் தலைமை பொதுக்குழு உறுப்பினர் அமிர்த விஜயகுமார் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %