0 0
Read Time:2 Minute, 42 Second

செம்பனார்கோவில் அருகே மாயமான டிரைவர், ஆற்றில் பிணமாக கிடந்தார். இவரை யாராவது கொலை செய்து உடலை ஆற்றில் வீசி சென்றனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

மயிலாடுதுறை திருக்கடையூர்: செம்பனார்கோவில் அருகே மாயமான டிரைவர், ஆற்றில் பிணமாக கிடந்தார். இவரை யாராவது கொலை செய்து உடலை ஆற்றில் வீசி சென்றனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான டிரைவர் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே வடகரை மில்லத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது43). டிரைவர். இவர் கடந்த 15-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடக்கவில்லை. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கடந்த 19-ந்தேதி செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சண்முகத்தை தேடி வந்தனர்.

ஆற்றில் பிணமாக கிடந்தார் இந்த நிலையில் செம்பனார்கோவில் அருகே கீழ்மாத்தூர் வெள்ளத்திடல் அருகே மஞ்சளாற்றில் சண்முகம் பிணமாக கிடந்துள்ளார். இதனை இந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணை மாயமாக சண்முகம் ஆற்றில் பிணமாக கிடந்ததால் அவரை யாராவது கொலை செய்து உடலை ஆற்றில் வீசி சென்றனரா? அல்லது குளித்த போது ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சண்முகத்திற்கு திருமணாகி 2 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %