0 0
Read Time:1 Minute, 53 Second

தரங்கம்பாடி, அக்டோபர்-06;
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, எடுத்துக்கட்டி ஊராட்சி, பூதனூர் காலனி தெருவை சேர்ந்த சீனிவாசன்- விஜயலட்சுமி என்பவர்கள் வசித்து வருகின்றனர். திங்கள் கிழமை அன்று இரவு இவர்களது வீடு திடீரென தீப்பற்றி தெரிந்துள்ளது. திடீரென தீப்பற்றியதால் சீனிவாசன் விஜயலட்சுமி தீயை அணைக்க முயன்றும் முடியாத சூழ்நிலையில் வீட்டின் வெளியில் வந்து உதவிக்கு சத்தமிட்டு அழைத்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் உடனே வந்து தீயை அனைத்து உள்ளனர்.

இத்தகவலை அறிந்த நாகை வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழக செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி வீட்டின் உரிமையாளருக்கு ரூபாய் 5 ஆயிரம் மற்றும் அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.

இதில் செம்பை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்.அப்துல்மாலிக்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எம் சித்திக் , எடுத்து கட்டி ஊராட்சி மன்ற தலைவர் பைலட் திமுக நிர்வாகிகள் ஊர் கிராம நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %