0 0
Read Time:2 Minute, 2 Second

தரங்கம்பாடி, அக்டோபர்- 12; மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, திருக்களாச்சேரி ஊராட்சி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சீர்காழி கோட்டம், காட்டுச்சேரி பிரிவு தாழ்வழுத்த மின்சாரத்தை சரி செய்து 3 புதிய 63 கிலோ வாட் மின்மாற்றியை ஆயப்பாடி கீழத்தெரு மற்றும் பெரிய தெரு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம் முருகன் ரிப்பன் கத்தரித்து, மின்மாற்றியை ஆன் செய்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்.அப்துல் மாலிக், செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் எம் சித்திக், சீர்காழி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் அப்துல் வகாப் மறைக்கயார், ஊராட்சி மன்ற தலைவர்கள் சம்சாத் ரபிக் (திருக்களாச்சேரி), நாகராஜன் (திருவிடைகழி), பைலட் (எடுத்துக்கட்டி) லெனின் மேசாக் (உத்திரங்குடி), செம்பை ஒன்றிய இளைஞரணி செயலாளர் செந்தில் மற்றும் மின்வாரிய பணியாளர்கள் திமுக நிர்வாகிகள் திருக்களாச்சேரி- ஆயப்பாடி கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %