0 0
Read Time:1 Minute, 59 Second

தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வட கிழக்கு பருவமழை இன்று துவங்க உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்காள விரிகுடா மற்றும் தீவிர தென் தீபகற்ப இந்தியாவில் வடகிழக்கு காற்று குறைந்த வெப்பமண்டல மட்டங்களில் உள்ளதால், வடகிழக்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு தீபகற்ப இந்தியாவில் தொடங்க வாய்ப்புள்ளது.

வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அக்டோபர் 29, 30 ஆம் தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர்,திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை,ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய நிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %