0 0
Read Time:2 Minute, 3 Second

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் 31 /10/ 2022 காலை 9.30 மணிக்கு தொண்டாமுத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் 148 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழாவும், 710 மாணவிகளுக்கு திருக்குறள் முப்பரிமான உலக சாதனை சான்றிதழ் வழங்கும் விழாவும் நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி ஜி. மாலா அவர்கள் தலைமையேற்றார்.

தொண்டாமுத்தூர் பேரூராட்சி மன்ற பெருந்தலைவர் திருமதி ர. கமலம் ரவி அவர்கள் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்தார். தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்ற தலைவர் டாக்டர் மா. சிவக்குமார் அவர்கள் திருக்குறள் முப்பரிமாண உலக சாதனை சான்றிதழை 710 மாணவிகளுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இவ்விழாவில் தொண்டாமுத்தூர் பேரூராட்சி மன்ற துணைப் பெருந்தலைவர் மு.ப. நடராஜ் அவர்கள, கவிஞர் சுப்பு. தருமன் அவர்கள், விஜய் மக்கள் இயக்க ஒன்றிய தலைவர் சி வெள்ளைச்சாமி அவர்கள், கவுன்சிலர் எம். லிதியா மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
விழா நிறைவாக பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் டி. ஆனந்த் அவர்கள் நன்றி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %