0 0
Read Time:3 Minute, 57 Second

தமிழ்நாட்டில் 44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தொடர்ந்த 50க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், நவம்பர் 6 ம் தேதியன்று ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை என காவல்துறைக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆர்எஸ்எஸ் தரப்பில் கடலூர், பெரம்பலூர் கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவை அவமதித்துள்ளதாகவும் வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில் அனுமதி வழங்க வேண்டுமென செப்டம்பர் 30 ம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பிறகு வேறு மாதிரியான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், அதைக் கருத்தில் கொண்டே 3 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டதாகவும், மேலும் 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அவற்றிற்கு அனுமதி வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, உளவுத்துறையின் அறிக்கையை பார்த்த பிறகு மீதமுள்ள 47 இடங்களில் அனுமதி வழங்குவது குறித்து உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, மூடி முத்திரையிட்ட உறையில் உளவுத்துறை தாக்கல் செய்த அறிக்கையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீதான 2007, 2008 ம் ஆண்டுகளில் பதிவான வழக்குகளைத்தான் குறிப்பிட்டுள்ளதாகவும், புதிய வழக்குகள் ஏதும் குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவித்தார்.

கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், நாங்குநேரி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை ஆகிய 6 இடங்களை தவிர மற்ற இடங்களில் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை பின்பற்றி ஊர்வலமாகவோ, உள்ளரங்க கூட்டமாகவோ நடத்தாலம் என உத்தரவிட்டுள்ளார். மேற்குறிப்பிட்ட இடங்களில் இயல்புநிலை திரும்பும்வரை காத்திருக்க வேண்டும் எனவும், அதன்பின்னர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவது குறித்து காவல்துறையிடம் புதிதாக விண்ணப்பிக்கலாம் எனவும் தெளிவுபடுத்தி உள்ளார். மேலும் அணிவகுப்பு ஊர்வலத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறக் கூடாது எனவும், மீறி நடந்தால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %