0 0
Read Time:2 Minute, 15 Second

மயிலாடுதுறை, நவம்பர்- 10;
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா வருகிற 27-ம் தேதி நடக்கவிருக்கிறது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் வடகரை- இளையாளூர் ஊராட்சியில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் அறிவுறுத்தலின்படி கழக தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஹேப்பி ஹர்ஷத் ஏற்பாட்டில், சாலை தூய்மை பணி மற்றும் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்றது.

இளையானூர் ஊராட்சியில் வாய்க்கால்களில் ஜேசிபி இயந்திரம் மூலம் குப்பைகள், ஆகாயத்தாமரை செடி புதர்கள் அகற்றி தூர்வாரப்பட்டன. மேலும் ஊராட்சியில் ஆங்காங்கே தேங்கி கிடந்த குப்பைகள் தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டது. இதனால் ஊராட்சி தூய்மையாக காணப்பட்டது. மேலும் கிராம மக்கள் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும், பூம்புகார் எம் எல் ஏ நிவேதா எம்.முருகன், பொதுக்குழு உறுப்பினர் ஹேப்பி ஹர்ஷத் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

இதில் செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.அன்பழகன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளரும், முன்னாள் ஒன்றிய குழு தலைவருமான எஸ்எம்.சம்சுதீன், ஒன்றிய குழு உறுப்பினர் மஜிநா சேக் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து பலர் கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %