0 0
Read Time:2 Minute, 4 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் சி.எஸ். குட்டிகோபி பொதுமக்களின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இதன் ஒரு பகுதியாக சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட மணிக்கிராமம் தச்சர் தெருவில் வசிக்கும் மக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து நிவாரண பொருட்களை வழங்கி பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.

உடன் மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ். ராஜ்குமார் மற்றும் சீர்காழி ஒன்றிய தலைவர் கமல் மற்றும் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர் மேலும் மழைக்காலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து உரிய நிவாரணங்களை வழங்கிட ஆணையிட்ட நடிகர்
விஜய் அவர்களுக்கும் தளபதியின் ஆணைக்கிணங்க மாவட்ட தலைவர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்ட மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் உத்தரவின் பெயரில் பொதுமக்களை நேரில் சந்தித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மயிலாடுதுறை மாவட்ட தலைவர் சி.எஸ்.குட்டிகோபிக்கும் பொதுமக்கள் தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர் மேலும் இந்நிகழ்வில் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்றனர்.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %