0 0
Read Time:1 Minute, 25 Second

உலக குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தின வார விழாவை முன்னிட்டு கோவை மாவட்டம் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் 19/11/2022 அன்று தொண்டாமுத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி ஜி.மாலா, ஆசிரியை டி.சுமதி, காவலர்கள் லதா, தீபா ஆகியோர் இணைந்து ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி சி.நிவேதா அவர்கள் பேச்சு போட்டியில் முதலிடம் பெற்றதை பாராட்டி பரிசு வழங்கினார்.
பரிசு பெற்ற மாணவிகளுக்கு தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றத் தலைவர் டாக்டர் மா.சிவக்குமார், இந்திய மனித நேய விருதாளர் சி.ஷைனிசிவக்குமார், சி.வருண் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %