0 0
Read Time:2 Minute, 10 Second

நாகையில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வரும் ஆறாம் வகுப்பு மாணவிகளை அறிவியல் தொடர்பான படம் காட்டுவதற்காக ஏவி ரூமுக்கு ஆசிரியர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கே சினிமா பட கருவியை (projector) இயக்கியவுடன் பலான சினிமா ஓடி இருக்கிறது. இதனைப் பார்த்து மாணவிகளும் ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்து சினிமா பட கருவியை(projector) நிறுத்துவதற்கு முயன்றனர். ஆனால் கருவியை நிறுத்த முடியாமல் சுமார் அரை மணி நேரம் ஆபாசபடமே ஓடியிருக்கிறது.

இதைப் பார்த்த ஆறாம் வகுப்பு மாணவிகள் முகத்தை மூடிக்கொண்டு வெளியே ஓடி வந்துள்ளனர். இந்த பிரச்சனையை பள்ளி நிர்வாகம் அப்படியே மூடி மறைத்து விட மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளனர்.

உடனே பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் செய்ததன் பேரில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

முதல் இரண்டு நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறை தினமாக இருந்ததால் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் யாரோ இந்த ஆபாச படத்தை பார்த்ததாகவும் அப்போது மின்தடை ஏற்பட்டு விட்டதால் அதை அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் திங்கட்கிழமை காலை மாணவிகளுக்காக சினிமா படக் கருவியை (Projector) இயக்கிய போது அந்த ஆபாச படம் ஓடியதாகவும் கூறுகிறார்கள். இந்த சம்பவம் நாகை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Source: Kumudham

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %