0 0
Read Time:1 Minute, 52 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் தேர்தலில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கேப்டன்.ஹாஜி எம்.ஹமீது அப்துல் காதர் அவர்களை கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் அவர்கள் நேரில் சந்தித்து தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அப்போது முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட கழக இணைச்செயலாளர் எம் ரங்கம்மாள், துணைச் செயலாளர் செல்வம், பரங்கிப்பேட்டை நகர கழக செயலாளர் மாரிமுத்து, மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் வீராசாமி, குமராட்சி ஒன்றிய கழக செயலாளர் சுந்தரமூர்த்தி, பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் ஜெ.வசந்த், அவைத் தலைவர் மலைமோகன், முன்னாள் அவைத்தலைவர் ஷாஜகான், ஜெய்சங்கர், பேரூராட்சி மன்ற உறுப்பினர் சங்கர், தவர்தாம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜன், குமராட்சி ஒன்றிய மாணவரணி செயலாளர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் கலைவாணன், வேலவன், காமில், எகையா மரைக்காயர் மற்றும் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %