0 0
Read Time:2 Minute, 19 Second

தொண்டாமுத்தூர் ஒன்றிய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 04/12/2022 ஞாயிறு காலை 10.30மணிக்கு தொண்டாமுத்தூர் அருகே போளூவாம்பட்டியில் குழந்தைகள், ஏழை, எளிய மக்கள் 100 பேருக்கு 10 – வது வாரமாக ரொட்டி, பால், முட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு ஆலாந்துரை சக்திவேலன் திரையரங்க உரிமையாளர் திரு. பி.ஜீ. ராஜன் அவர்கள் தலைமை ஏற்றார். ஒன்றிய தலைவர் சி. வெள்ளைச்சாமி அவர்கள்  முன்னிலை வகித்தார். ஒன்றிய பொறுப்பாளர் நவீன் அவர்களின் புதல்வன்  ஹர்த்திக்  அவர்கள்  ரொட்டி, பால், முட்டை  வழங்கினார். தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்ற நிர்வாகி சி.வருண் வாழ்த்துரை வழங்கினார்.
    நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளர் சதீஷ்,  துணைச் செயலாளர்  கார்த்திக்,  ஒன்றிய  அமைப்பாளர் கே.ஆனந்த், துணைத் தலைவர் ஹரி, நிர்வாகிகள் ஆர். லியோராஜ்,  சி.வருண் , கணேஷ்,  அருண்,  சங்கர்,  தாமரைச்செல்வன்,  முத்துக்குமார்,  எஸ்.  நாகராஜ்  உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

தொடர்ந்து பத்து வாரமாக ஏழை, எளிய மக்கள் மற்றும் அரசு மருத்துவமனை உள் நோயாகளுக்கு  ரொட்டி, பால், முட்டை வழங்கும் நிகழ்ச்சியை  நடத்தி வரும் தொண்டாமுத்தூர் ஒன்றிய தலைவர் சி. வெள்ளைச்சாமி மற்றும் நிர்வாகிகளுக்கு தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்ற தலைவர் டாக்டர் மா. சிவக்குமார் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %