0 0
Read Time:1 Minute, 44 Second

தரங்கம்பாடி, டிச- 07;
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட 9-வது வார்டில் தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை மற்றும் துணை வேளாண்மை விரிவாக்கம் மைய விதை சேமிப்பு கிடங்கு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வேளாண்மை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அமைப்பாளராக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டில் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் செம்பை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்.அப்துல்மாலிக், செம்பனார்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், தரங்கை பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணசங்கரி குமரவேல், செம்பனார்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தாமஸ் உதவி பொறியாளர் கீர்த்திவாசன், கிடங்கு மேலாளர் நாகராஜன், ஒப்பந்ததாரர் பழனிவேல், மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %