0 0
Read Time:2 Minute, 1 Second

சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் சோனியா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரம் மேலரத வீதியில் உள்ள சிறை மீட்ட விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அர்ச்சனை ஆராதனைகள் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில செயலாளர் டி கே எம் வினோபா தலைமை ஏற்று நடத்தினார் முன்னதாக சோனியா காந்தி பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பழனி என்கின்ற பாலதண்டாயுதம் புவனகிரி வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயசீலன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கஜேந்திரன் நகர காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் ராஜரத்தினம் மாவட்டச் செயலாளர் கவரப்பட்டு முரளி நஞ்சமங்கலத்து வாழ்க்கை காங்கிரஸ் செயலாளரும் முத்துசாமி புவனகிரி மணிகண்டன் சீர்காழி கார்த்திக் உள்ளிட்ட ஏராளமான கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விவசாய அணி மாநிலச் செயலாளர் வினோபா இந்த வருடம் முழுவதும் சோனியா காந்தியின் பிறந்தநாள் விழா அந்தந்த வட்டார ஒன்றிய மாவட்ட கிளை பகுதியில் காங்கிரஸ் கொடியை ஏற்றி சோனியா காந்தி பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %