0 0
Read Time:2 Minute, 4 Second

தரங்கம்பாடி, டிச.13: மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பொறையார் கலைஞர் அரங்கத்தில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட செயலாளருமான நிவேதா எம். முருகன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி.என்.விஜயபாலன் தலைமையில் செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட இலுப்பூர், பரசலூர், செம்பனார்கோவில், மேலப்பெரும்பள்ளம் உள்ளிட்ட 10 ஊராட்சிகளை சேர்ந்த சுமார் 100 -க்கும் மேற்பட்டோர் அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், செம்பை ஒன்றிய அவைத் தலைவர் மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் எம்.அப்துல்மாலிக், பி.எம்.அன்பழகன், மயிலாடுதுறை மாவட்ட திமுக துணை செயலாளர் மு.ஞானவேலன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சித்திக், நகர செயலாளர் முத்துராஜா, செம்பை ஒன்றிய துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %