0 0
Read Time:1 Minute, 57 Second

கடந்த ஆட்சியை விட தற்போது ஆவின் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த திருவேற்காட்டில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார்.

பின்னர் மணமக்களை வாழ்த்தி பேசிய அவர், திமுக கொடியை அதிகம் ஏற்றிய பெருமை கருணாநிதிக்கு பிறகு, தனக்கும் உள்ளதாக தெரிவித்தார். கட்சி நிகழ்ச்சிகளில் தான் பங்கேற்க செல்லும்போது அமைச்சர் நாசரும் உடனிருப்பார் என்றும், அமைச்சர் நாசரிடம் எந்த பொறுப்பையும் ஒப்படைத்தாலும் அதனை திறம்பட முடித்து விடுவார் எனவும் பாராட்டு தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் தீபாவளியின் போது ஆவின் பொருட்கள் 55 கோடி ரூபாய்க்கு தான் விற்பனை நடந்தாகவும், தற்போது திமுக ஆட்சியில் 85 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

“திமுகவில் யார், தும்மினால் கூட போதும் அதனை விமர்சனம் செய்ய இன்று பலர் காத்துக் கொண்டிருப்பதாக கூறினார். நம்பர் ஒன் முதலமைச்சர் என்பதை விட நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே தனக்கு பெருமை என்றும் தனது பேச்சின்போது குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %