0 0
Read Time:1 Minute, 28 Second

கடலூர் கிழக்கு மாவட்டம் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றியம் கிள்ளை பேரூராட்சி சார்பில் நகர கழக செயலாளர் தமிழரசன் தலைமையில் ஆளும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ பாண்டியன் பால் உயர்வு சொத்து வரி மின் கட்டணம் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து திமுக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் சிதம்பரம் நகரத் துணைச் செயலாளர் அரிசக்திவேல் ஒன்றிய செயலாளர் அரசாங்கம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன் தலைமைக் கழக பேச்சாளர் தில்லை கோபி கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த் பாசறை செயலாளர் சண்முகம் ஒன்றிய குழு உறுப்பினர் சுதாகர் கொத்தட்டை ஊராட்சி மன்ற தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %