0 0
Read Time:2 Minute, 48 Second

செம்பனார்கோயில், டிச.20:
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் எம். அப்துல்மாலிக் ஏற்பாட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார்.

திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் பி.எம். அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.சி.என்.விஜயன், எம்.எம்.சித்திக், ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கபிலன், வின்சென்ட், வெற்றிவேல், ஜி.என்.ரவி, ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

இதில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு கழகத்தின் 15 -வது அமைப்பு புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்தும், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது மற்றும் கட்சி ஆக்க பணிகள் குறித்தும் பேசினர்.

கூட்டத்தில், தரங்கை பேரூர் திமுக செயலாளர் முத்துராஜா, பேரூர் மன்ற தலைவர் சுகுண சங்கரி குமரவேல், ஒன்றிய துணை பெரும் தலைவர் மைனர் பாஸ்கர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராபியா நர்கீஸ் பானு, மாவட்ட பிரதிநிதிகள் கே.எஸ்.எஸ்.கருணாநிதி, கே.பி.ராஜா, ஒன்றிய துணை செயலாளர்கள் சிவகுமார், இளங்கோவன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஷகீலா அஜிஸ், தேவிகா வேந்தன், கிருபாவதி சிவக்குமார், எரவாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் பகவதி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %