0 0
Read Time:1 Minute, 36 Second

மயிலாடுதுறை:செம்பனார் கோவில் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் மூலம் நெல் கொள்முதல் நடைபெற்றது.

செம்பனார்கோவில், டிசம்பர்- 26;
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய மின்னணு சந்தை திட்டத்தின் மூலம் சுமார் 110 குவிண்டால் நெல் சுமார் ரூ . 2,50,000 க்கு இ -நாம் ஏலமுறையில் கொள்முதல் செய்யப்பட்டது.

மேலும் இதை போல் விவசாய விளை பொருட்களான எள், நிலகடலை, சோளம், கம்பு, ராகி, மக்கா சோளம், தேங்காய், முந்திரி, மிளகாய், சோயா, பயறு, உளுந்து போன்ற விவசாய விளை பொருட்களை நாகை விற்பனைகுழுவின் இயங்கும் செம்பொனார்கோவில், மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம், திருபூண்டி, கீழ்வேளூர், நாகப்பட்டினம் ஆகிய விற்பனை கூடங்களுக்கு விவசாயிகள் எடுத்து வந்து நல்ல விலைக்கு விற்று பயன் பெற வேண்டும் என விற்பனை குழு அதிகாரிகள் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %