18 ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் – அ.இ.அ.தி.மு.க சார்பில் மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ., மலர் தூவி அஞ்சலி.
கடந்த 2004 ஆம் ஆண்டு பல்லாயிரம் உயிர்களை பலி வாங்கி உலகையே உலுக்கிய சுனாமி பேரலையின் 18 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் சிதம்பரம் அடுத்த சாமியார்பேட்டை, புதுக்குப்பம் கடற்கரை கிராமங்களில் நடைப்பெற்ற நினைவு நாள் நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டு சுனாமியில் உயிர் நீத்த மக்களுக்கு அவர்களின் நினைவிடங்களில் மலர் வலயம் வைத்தும், கடலில் மலர் தூவியும் மெழுகு வர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினார்.
இதில் முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் கோவி.ராசாங்கம், மாவட்ட கழக இணை செயலாளர் எம்.ரெங்கம்மாள், மாவட்ட மீனவர் செயலாளர் வீராசாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரவி, ஆனந்தஜோதி சுதாகர், ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி ரெங்கசாமி, துணை தலைவர் விஜயராஜா, பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் ஜெ.வசந்த், கிள்ளை நகர கழக செயலாளர் தமிழரசன், ஒன்றிய கழக அவைத் தலைவர் ரெங்கசாமி, மேலவை பிரதிநிதி பாவாடை, புவனகிரி ஒன்றிய இளைஞரணி செயலாளர் செழியன், நிர்வாகிகள் பாலமுருகன், பிரியா, பிரகாஷ் மீனவ கிராம முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி