0 0
Read Time:1 Minute, 12 Second

சிதம்பரம் தாலுகா போலீசார் சப்-இன்ஸ் பெக்டர்கள் சுரேஷ் முருகன், ரவிச்சந்தி ரன் மற்றும் போலீசார் நேற்று சிதம்பரம் அருகே உள்ள பொய்யாபிள்ளைசாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட் டிருந்தனர். அப்போது அந்த வழியாக சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த வாலிபரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்து பார்த்தனர். அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசார ணையில் அவர், என். பூலாமேடு கிழக்கு தெருவை சேர்ந்த முருகானந்தம் மகன் ராஜன் (வயது 22), விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ராஜனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 1கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %