0 0
Read Time:2 Minute, 14 Second

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வியாழக் கிழமைகள் தோறும் மாவட்ட முன்னோடி முன்னோடி வங்கி மேலாளர், வருவாய் வட்டாட்சியர்கள், சமூகபாதுகாப்பு வட்டாட்சியர்கள், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள், இணை இயக்குநர் சுகாதாரபணிகள் ஆகிய துறைகளை கொண்டு மயிலாடுதுறை கோட்டத்திற் குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் வருகின்ற 12.01.2023 அன்றுகாலை 11.00 மணி அளவில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளதால்

மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவையை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறும், மேலும் இது நாள் வரைதனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் தாங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அனைத்து பக்கங்களின் நகல், மற்றும் மருத்துவ சான்று நகல், ஆதார் அட்டை நகல், குடும்பஅட்டை நகல், வாக்காளர் அட்டைநகல், முதலமைச்சரின் மருத்துவக்காப்பீட்டு அட்டைநகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 1, கைப்பேசி எண், ஆகிய அளிவிலான தற்போதைய போட்டோ ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் l இரா. லலிதா தெரிவித்துக் கொள்கிறார்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %