0 0
Read Time:2 Minute, 4 Second

ஆளுநர் பொங்கல் வாழ்த்தில் தமிழ்நாடு என்று பயன்படுத்தியது தமிழ்நாடு அரசுக்கு
கிடைத்த வெற்றி என அமைச்சர் ரகுபதி கூறினார்.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை சின்ன பாப்பாவில் உள்ள ஏழு அடி
உயரமுள்ள திருவள்ளுவர் வெங்கல சிலைக்கு கம்பன் கழகம் திருவள்ளுவர் பேரவை
உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யும்
நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கம்பன் கழக தலைவர் தொழிலதிபர் எஸ் ராமச்சந்திரன்
திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை
ஆளுநர் பொங்கல் வாழ்த்தில் தமிழ்நாடு என்று பயன்படுத்தியது தமிழக அரசுக்கு
கிடைத்த வெற்றி.

செங்கல்பட்டில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவன் ஒருவன் அடித்த கொலை
செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை
எடுக்கப்படும்.

பாஜக தலைவர் அண்ணாமலை சுபஸ்ரீ மரண வழக்கை என்னிடம் அளித்தால் குற்றவாளிகளை ஏழே நாளில் கண்டுபிடிப்பேன் என்று கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர் அண்ணாமலை என்ன செய்வார் என்று எங்களுக்கு தெரியாதா. கர்நாடகாவில் அவர் போட்ட வழக்கை போய் விசாரணை செய்ய சொல்லுங்கள் என்று கூறிவிட்டு சென்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %