1 0
Read Time:1 Minute, 41 Second

காட்டுமன்னார்கோவில் ஜன-15

கடலூர் மாவட்டம், குமராட்சி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கொண்டாடப்பட்டது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.ஜி தமிழ்வாணன் தலைமை தாங்கினார்.
முன்னதாக சர்க்கரை பொங்கல் வைத்து செங்கரும்பு, வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வைத்து சூரிய பகவானுக்கு படையலிட்டு வணங்கினர். பின்னர் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் மனைவியும் ,கணித முதுகலை ஆசிரியர்
ராஜேஸ்வரி விழாவில் கலந்து கொண்டு தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள்,பணிதள பொறுப்பாளர் அனைவருக்கும் வெண்கல பானை ,கரும்பு, வழங்கி சிறப்பித்தார்.

உடன் வாழ்வாதார இயக்க மேலாளர் திருமாவளவன், ஊராட்சித் துணைத் தலைவர் உமா மகேஸ்வரி விஜயகுமார் ,வார்டு உறுப்பினர்கள் பாக்யராஜ் ராஜமலையசிம்மன் ராஜலட்சுமி மணிகண்டன் மாரியம்மாள் மணிகண்டன் சிவசங்கரி இளையராஜா மணிவாசகம் ஊராட்சி செயலர் சிலம்பரசன் ஒருங்கிணைப்பாளர் சிங்கராசு உள்பட பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %