0 0
Read Time:1 Minute, 51 Second

செம்பனார்கோவில், ஜனவரி- 26:
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோவில் ஒன்றியம், திருக்கடையூர் அரசு நடுநிலைப் பள்ளியில் 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமை தாங்கினார், ஊராட்சி செயலாளர், மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆக்கூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பிள்ளைபெருமாநல்லூர் ஊராட்சியில் தீபா முனுசாமி தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது, ஊராட்சி செயலாளர் மதியழகன் முன்னில வைத்தார், டீ. மணல்மேடு ஊராட்சியில் திலகவதி துரைராஜன் தலைமையிலும், மடப்புரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மெஹ்ராஜின்னிசா செல்வநாயகம் தலைமையிலும், காலமநல்லூர் ஊராட்சியில் நடராஜன் தலைமையிலும், கிள்ளியூர் ஊராட்சி தலைவர் கோவிந்தசாமி தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டங்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %