0 0
Read Time:1 Minute, 42 Second

தரங்கம்பாடி- ஜனவரி- 29;
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஸ்ரீ ரேணுகாதேவி திருமண மண்டபம் அருகில் உள்ள மைதானத்தில் வருகின்ற 31.01.2023 செவ்வாய் கிழமை அன்று மாலை 3 மணியளவில் 11 மாவட்ட மீனவ பிரதிநிதிகளின் மாபெரும் ஆலோசனை பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குவலை சம்பந்தமாகவும், உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள இடைக்கால தீர்ப்பினை மையமாக கொண்டும், இரட்டைமடிவலை, அதிக குதிரைதிறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்ட விசைப்படகு சம்பந்தமாகவும் கன்னியாகுமரி முதல் பாண்டிச்சேரி வரை உள்ள நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர், பாண்டிச்சேரி, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்தூக்குடி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்ட மீனவ கிராம பிரதிநிதிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து மாவட்ட மீனவ கிராமங்களின் பிரதிநிதிகள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு மயிலாடுதுறை மாவட்ட தரங்கம்பாடி மீனவ தலைமை கிராம பஞ்சாயத்தார்கள் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %