0 0
Read Time:1 Minute, 56 Second

டேங்கர் லாரி மோதிய விபத்தில் தந்தை மகன் இருவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்திள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பகுதியில் விஜயகுமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருடைய மகன் பாலச்சந்திரன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று விஜயகுமார் தனது மகனான பாலச்சந்திரனை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வெளியே புறப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் சாக்கோட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இவர்கள் பின்னால் கழிவுநீர் ஏற்றிக்கொண்டு வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்ததால் விஜயகுமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

அதன்பின் கழிவுநீர் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரியின் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் தப்பி ஓடிய டேங்கர் லாரி டிரைவரை கவத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %